Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் போற்றி அகவல்

aruNaikirinAtar pORRi akaval
of V.S. CengkalvarAya piLLai
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to Mrs. Gnanapurani Madhvanath for providing us
    with a printed copy of the work and to Dr. Anbumani Subramanian for scanning the pages.
    Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
    We thank the following persons in the preparation and proof-reading of the etext:
    V. Ramasami, V Devarajan and Sriram Sundaresan
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2011.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் போற்றி அகவல்




    திருத்தணிகேசன் துணை.

    அருணகிரிநாதர் போற்றி அகவல்


    (போற்றி 108)


    அருணைப் பதிவரும் அண்ணலே போற்றி
    தவஞ்சார் குலத்தவ தரித்தனை போற்றி
    புவிவாழ் வாழ்க்கை புண்தரும் என்று
    சோகமுற் றுயிரைத் துறக்க, அருணைக்
    கோபுரத் திருந்து குதித்த ஞான்று - 5


    பூர்வ புண்ணியப் பூர்த்தியின் பயனால்
    எம்மான் பெம்மான் எந்தை முருகனால்
    ஆட்கொளப் பெற்ற அரசே போற்றி
    திருவடி தீஷை பெற்றனை போற்றி
    மௌனோப தேச மாண்பது பெற்றும், - 10


    'அருணகிரி நாத'என் றழைக்கப் பெற்றும்,
    கீரனை மீட்ட கிளர்வடி வேலால்
    நாவிற் சடாக்ஷரம் நாட்டப் பெற்றும்
    ஞான உயர்நிலை நயந்தனை போற்றி
    'முத்தித் தரு' எனும் முதலடி முதல்வன் - 15


    எடுத்துக் கொடுக்க எழிலார் பாக்கள்
    பதினா றாயிரம் பாடினை போற்றி
    அண்ணா மலையரும் உண்ணா முலையளும்
    திருநீ றளித்துச் செவ்வே புரக்கும்;
    தண்ணருள் பெற்ற புண்ணிய போற்றி - 20


    மலநோய் மாண்டிட வள்ளியின் கரத்தால்
    தீண்டப் பெற்ற ஆண்டகை போற்றி
    தலந்தொறும் சென்று சண்முகற் றுதித்து
    நலஞ்சார் பாடல் நவின்றனை போற்றி
    திருவெணெய்ப் பதியில் திருநடங் கண்டு - 25


    களித்துப் பாடிய கவிஞனே போற்றி
    தில்லையில் நடன திவ்விய தரிசனம்
    ஒல்லையிற் கண்டங் குவந்தனை போற்றி
    ஏரகப் பதியில் எந்தை பாத
    தரிசனம் பெற்ற தவத்தோய் போற்றி - 30


    திருவை யாறுடன் ஏழு திருப்பதி
    விழாவைக் கண்ட மேலவ போற்றி
    தண்ணியல் வயலூர்த் தலத்தினில் அத்தன்
    வித்தக மருப்புடை வேழமுகத்தன்
    மயில்வேல் கடம்பு மாணடி குக்குடம் - 35


    பன்னிரு தோளவை பயிலும் சந்தம்
    பாடெனச் செப்பும் பாக்கியம் பெற்ற
    உத்தம பத்தியில் உயர்ந்தோய் போற்றி
    திருப்புகழ் நித்தம் செப்பும் பேற்றை
    அத்தலத் தேபெற் றமர்ந்தனை போற்றி - 40


    'விகட பரிமள' எனவரும் வீறார்
    அரிய பெரிய திருப்புகழ் அதனைச்
    செப்பிய ஞான்று திருவார் முருகன்
    கனிவுடன் ஏக முகத்துடன் கனவிடைத்
    தோன்றி 'அன்ப! சுதினம் இன்றே - 45


    விராலி மலைக்கு வா' என விளக்கி
    அவாவுடன் அழைக்க அணைந்தனை போற்றி
    கருச்சந் திப்பைக் கழிக்க வல்ல
    திருச்செங் கோட்டிற் சேயைக் கண்டு
    நாலா யிரங்கண் நான்முகன் படைத்திலன் - 50


    அந்தோ என்றங் கழுங்கினை போற்றி
    நாகா சலத்து நாத எனக்கு
    நால்வகைக் கவிகள் நயந்தளித் தென்றும்
    சாகா வரமதைத் தந்தனை என்றே
    அநுபூதிக் கவி அருளினை போற்றி - 55


    எங்கே நினைப்பினும் அங்கே எனது
    செங்கோட்டு வேலன் தேர்ந்தளிப் பானெனச்
    செப்பி மகிழ்ந்த சீமான் போற்றி
    செடிக்கா பலசூழ் சென்னி மலையிற்
    படிக்காசு பெற்ற பண்ப போற்றி - 60


    கொடுங்குன் றத்துக் குமரன் ஆடிய
    நிர்த்த தரிசனம் நேரிற் காணும்
    மாதவப் பேறு வாய்ந்தனை போற்றி
    ஆவினன் குடிவாழ் அறுமுகன் அருளாற்
    செபமாலை பெற்ற திறத்தோய் போற்றி - 65


    உனது பழநி ஊரைச் சேவித்
    தறியேன் இதுவரை அந்தோ என்று
    மனந்தடு மாற மலைமிசை ஏறி
    அனந்தம் பாடல் அருளினை போற்றி
    பழநி பழநி பழநி என்னும் - 70


    அமுதப் பேரை அநுதினம் சொல்லி
    நெஞ்சே நற்கதி நேடிலை நீயென்
    றிடித்துக் கூறின எம்மான் போற்றி
    பழநிப் பெருமான் படிவம் மறவாக்
    கலிசைச் சேவகன் கவினார் பத்தியை - 75


    மெச்சி வியந்து நச்சினை போற்றி
    மதுரைப் பதியில் மதுரக் கவிகள்
    சிலபல பாடித் திருப்பரங் குன்றிற்
    செவ்வேள் மகிழத் திருப்புகழ் பாடிப்
    பரவிப் பணிந்த பரம போற்றி - 80


    செந்தூர்ப் பதியிற் சேய்கழல் பாடி
    முந்தூர் பத்தி முதிர்தரப் பெற்று
    நெஞ்சங் குளிர்ந்த நிமல போற்றி
    அத்தலந் தன்னில் அன்றொரு தினத்தில்
    தன்கண் காணத் தனிமுதற் பெருமான் - 85


    பாலகுமரன் பயில்திரு நடனம்
    கண்டு களித்த காதல போற்றி
    வாதுக் கழைத்து வண்டமிழ்ப் புலவர்க்
    கேதம் விளைத்த இயற்றமிழ்ப் புலவன்
    வில்லி என்னும் வல்லவன் திகைக்க - 90


    அந்தாதி பாடி அரும்பொருள் காண
    முடியா வகையில் முடித்தொரு செய்யுளைச்
    செப்பிய திறஞ்சேர் செம்மலே போற்றி
    இலங்கைத் தீவின் எழிலுறு தலங்கள்
    தரிசனம் செய்த சதுரனே போற்றி - 95


    மகாடவி ஒன்றில் வழியிழந் தங்கே
    அலமந்த போதில் அறுமுக வள்ளல்
    சகாயஞ் செய்யத் தழைத்தனை போற்றி
    இலங்கைத் தீவில் எழி ற்கதிர் காமத்
    தலத்தினில் வேடன் தந்த பூஜையை - 100


    மகிழ்ந்தவ என்ன மயிலவற் றுதித்தே
    'அகரமு மாகி' எனவரும் அந்த
    திவ்விய திருப்புகழ் திருவளர் சோலை
    மலையினிற் பாடி வணங்கினை போற்றி
    துருத்தித் தலத்தில் சுப்பிர மணிவேள் - 105


    மயிற்பொறி வேற்பொழி வழங்கப் பெற்ற
    மகாதவம் பெற்ற மாண்பினை போற்றி
    தணிகை மலையினிற் சாமி நடனங்
    கண்டு களித்த கண்ணிய போற்றி
    வள்ளி யாடிய வள்ளி மலையைக் - 110


    குன்னம் குறிச்சி வெளியாக் கியமலை
    இஃதென விளக்கிய எந்தாய் போற்றி
    தமது மடத்திற் சண்முகன் உருவைக்
    கழிபே ருவகையில் வழிபாடாற்றிய
    சோம நாதரின் தூய பத்தியை - 115


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி
    செந்தமிழ் மணமுடன் தெய்வ மணங்கமழ்
    அலங்கார மாலை அருளினை போற்றி
    தேவி உபாசனைச் சம்பந் தாண்டான்
    வரவழை முருகனை எனவழக் கிடலும் - 120


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி தேவேந்த்ர சங்க வகுப்பது செப்பித்
    தேவியைத் திருப்தி யூட்டிச் சேயை
    மயிலுமாடி வாஎன் றழைத்து
    மன்னன் பிரபுட தேவன் மகிழச்
    சபைதனிற் காட்டிய சதுர போற்றி. - 125


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி கிளிஉரு அதனிற் கிளர்ந்து பறந்து
    பண்ணவர் உலகுறு பாரி ஜாதப் பூ
    மண்மிசைக் கொணர்ந்த மகிப போற்றி
    தனதுடல் மறைந்த தகைமையைக் கண்டதும்
    திருவருள் இஃதெனத் தேறிச் சுகவுரு - 130


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி சுகவுரு என்னச் சுகித்த நிலையில்
    அநுபூ திக்கவி அருளினை போற்றி
    அவ்வத் தலங்களில் அருளிய கவிகளில்
    உலகோர் உய்யும் ஒருவழி காண
    விளக்கம் பலபல விரித்தனை போற்றி - 135


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி கனைத்தெழும் பகட்டினன் கலக்குறும் செயலற
    'உனைத்தினம்' எனும் புகழ் உரைத்தனை போற்றி
    எப்போது வருவாய் என்முன் எனவரு
    'முந்துதமிழ்ப்' பாவை மொழிந்தனை போற்றி
    என்றுநின் தெரிசனை எனக்குறு மோஎனும் - 140


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி 'அந்தகன்' எனும்புகழ் அருளினை போற்றி
    'வீணாள் படாதருள்' எனும் புகழ் விழைந்து
    சொற்ற திருப்புகழ்ச் சுந்தர போற்றி
    'நாத விந்து கலாதீ' என நவின்
    றோது பூஜைப் புகழ்உல குய்ய - 145


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி ஓதின எங்கள் உத்தம போற்றி
    இக்குறை உண்டிங் கிந்நலம் இல்லை
    என்னிடத் தெனமுறை யிட்ட புகழ்ப்பா
    உலகுய ஈந்த உண்மைய போற்றி
    செனனமிங் குண்டெனில் செவிடு குருடெனும் - 150


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி குறைகளாற் குன்றிக் குறைபடா வகைதந்
    தென்மனம் என்றும் நின்பாற் பொருந்துக
    எனுமுறை யீட்டை எம்பிரா னிடத்தே
    வைத்த அருள் நிறை வித்தக போற்றி
    முப்பால் செப்பிய கவிதையின் மிக்கதாம் - 155


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி தேவா ரஞ்சொலும் தெய்வம் இவரென
    ஏத்தி ஓர் நுண்பொருள் இயம்பினை போற்றி
    ஆறு முகமென ஆறு முறை சொலித்
    திருநீ றிடும்வகை தெரித்தனை போற்றி
    ஞான யோக நன்னிலையதனை - 160


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி 'ஞானங்கொள் பொறி'தனில் நாட்டினை போற்றி
    'இகபர சௌ பாக்யம்' இருநிலத் தோர்பெற
    'வசனமிக' என்னும் மாண்பார் பாவை
    வகுத்த கருணைசேர் வரதனே போற்றி
    'வரதா மணி' எனும்வலமார் புகழில் - 165


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி ரசவா தத்தை உதவா ரசமென
    உதறித் தள்ளிய உத்தம போற்றி
    மகவது வேண்டினோர் மகவது பெறவே
    பிள்ளைப் பெருமநின் பீடுறு வாயால்
    முத்தந் தந்தருள் எனவரும் மொய்ம்பார் - 170


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி புகழது செப்பிய புண்ணிய போற்றி
    ஓவிய அந்தமே ஒன்றுக எனவிழை
    ஓர்புகழ் உரைத்த ஒள்ளிய போற்றி
    'நாவே றெ'னவரும் நற்றிருப் புகழில்
    நீநான் அற எனும் நின்மல முத்தியை - 175


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி நாடி விரும்பிய நாதனே போற்றி
    'இடர்சங் கைகளவை எனைக் கலக் காவகை
    எந்தாய் அருளென எந்தையை வேண்டி
    நாமுய 'அதிரும் கழலெனும்' நற்பா
    தந்த கருணைத் தம்பிரான் போற்றி - 180


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி சமாதி மனோலயம் தந்தருள் என்னும
    சமானமில் புகழைச் சாற்றினை போற்றி
    திருப்புகழ் செப்பும் திறத்தினர் உழைநான்
    சேர்வகை யருளெனும் செம்மலே போற்றி
    நோயிலா வாழ்வை நாம்பெறு நோன்மை - 185


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி பெற்றுய வேண்டிப் பேரரு ளோடே
    'இருமலு ரோக முயலகன் வாதம்'
    எனும்புகழ் எங்கட் கீந்தனை போற்றி
    பகைத்திறம் வெல்லும் பாணம தாகும்
    'சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்' - 190


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி எனும்புகழ் செப்பிய எம்மான் போற்றி
    'மைந்தா குமரா' எனுமந் திரத்தை
    'அந்தோ மனமே' என அழைத் தழகாய்
    உபதே சித்தஒரு முதல் போற்றி
    'ஆடு மயிலின்' தத்துவம் அறிகிலேன் - 195


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி என உரைத் தேங்கிய எந்தாய் போற்றி
    நாணமில் நிலையை நயந்தருள் என்னப்
    பேணி இரங்கிய பெரும போற்றி
    ஈதலே அறமென எடுத்துக் காட்டிய
    மாதவ முநிவ மகிப போற்றி - 200


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி மணம்நிறை வேறும் வாய்ப்பினை வேண்டினோர்
    நினைப்பது கூடிட 'நீலங்கொள்' என்னும்
    அழகிய பாடலை அருளினை போற்றி
    கருப்பம் நலனுறக் கருதினர் ஓத
    'மதியால் வித்தகன்' எனவரும் மாண்பார் - 205


    எடுத்து விளக்கிய இறைவ போற்றி பாவினைத் தந்த பகவ போற்றி
    உருகும் அன்புடன் முருகன் பொறையை
    வியந்தங் கேத்திய மெய்த்தவ போற்றி
    தாப சபலம் தணக்கும் வழியினைத்
    தந்தருள் கந்த சண்முக குகனே - 210


    எனத்துதி செய்த எம்பிரான் போற்றி
    உதய மரணம் ஒன்றிடாப் பொருளை
    உதவுக என்ற உத்தம போற்றி
    விதிவழி யேஎனை வினைநோய் சூழின்
    கலங்கா மதியைக் கருணா கரநீ - 215


    ஈந்தருள் என்ற இறைவ போற்றி
    மதியோ கதியோ மாண்புறும் ஒன்றைத்
    தந்தருள் என்ற சதுர போற்றி
    'வேந்தா சேந்தா' என விழை மந்திரம்
    வீண்போ காதென விளம்பினை போற்றி - 220


    யானென தறலே இன்ப முத்தி
    எனுந்தத் துவத்தை இயம்பினை போற்றி
    உண்பதன் முன்னர் 'சண்முக வா' என
    உரைத்தங் கொருபிடி யீந்தபின் உண்க
    எனுமுப தேசம் ஈந்தனை போற்றி - 225


    தனிவழி நடக்கும் தருணம் வேல்மயில்
    எனச்சொலி நடக்கஎன் றியம்பினை போற்றி
    முத்தி வேண்டினோர் முருகனற் பதத்தில்
    கருத்தைப் புகட்டின் கடிதிற் பெறலாம்
    எனுமறை மொழியை இசைத்தனை போற்றி - 230


    கொள்களின் கொடுமை குலைகுலைந் திடவே
    'சேயவன் புந்தி' எனுந்திருப் பாவை
    உலகுக் களித்த ஒருவ போற்றி
    தும்மும் போதெலாம் 'குமர சரணம்'
    எனச் சொலும் வழக்கம் ஏற்படின் உய்தி - 235


    பெறலாம் என்ற பெருமைய போற்றி
    பிறவிக் கடலிற் பிடிபடா திருக்க
    விரும்பினால் முருகன் மேதகு நாமம்
    புகலுக என்று புகன்றனை போற்றி
    புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் - 240


    போக்க விரும்பினோர் புனித மூர்த்தியாம்
    முருகனை மறவா முறைசித் திக்க
    பொய்யை நிந்திக்க உண்மை சாதிக்க
    என எடுத் துரைத்த ஏந்தலே போற்றி
    தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் - 245


    தானம் இடுங்கோள் தவறா தென்றும்
    இருந்த படியே இருங்கோள் என்ற
    பேருப தேசம் பேசினை போற்றி
    கதிபெற வேண்டின் கரவா திடுக
    கருதுக வடிவேல் இறைதிருக் கழலை - 250


    எனக்குறிப் பிட்ட எந்தாய் போற்றி
    வாழி வாழி எனமற வாது
    பரவிடின் சரண பங்கயம் தருவன்
    முருகன் என்று மொழிந்தனை போற்றி
    சிற்றடிப் பெருமையைச் செப்பினை போற்றி - 255


    வேலின் பெருமையை விளக்கினை போற்றி
    வேல்வாங்கு திறத்தை விரித்தனை போற்றி
    திருக்கை வழக்கம் தெரித்தனை போற்றி
    ஞானவேழம் நவின்றனை போற்றி
    சித்து வகுப்பைத் திறமுடன் ஓதித் - 260


    திருப்புகழ்ப் பெருமையைத் தெரித்தனை போற்றி
    கருத்தன் அருளிய பெருத்த வசனப்
    பெருமையின் அருமையைப் பேசினை போற்றி
    கிள்ளை மொழியாள் வள்ளியின் வேளைக்
    காரன் முருகெனக் கழறினை போற்றி - 265


    வேடிச்சி காவலன் வேலவ நீஎனப்
    பாடிக் கசிந்துளம் பரவினை போற்றி
    பூதவே தாள அலகைகள் போரிற்
    கொண்ட குதூகலம் விண்டனைப் போற்றி
    திருப்புயப் பெருமையைச் செப்பினை போற்றி - 270


    கந்தன் முருகன் கடம்பன் கருணையன்
    கடைக்கண் இயலைக் கடைந்தெடுத் தோதிப்
    பயன் பல உண்டு பாரீர் பாரீர்
    வாரீர் வாரீர் எனப் பறை சாற்றிய
    பரம கருணைப் பண்பனே போற்றி - 275


    மௌன நிலையே மதிப்பிலா திலகும்
    சிவலோ கம்மெனச் செப்பினை போற்றி
    இங்ஙனம் எம்மான் எழிலதை வகுத்துத்
    தணிகை எம் பெருமான் தன் கரத் தமர்ந்த
    சுக உரு விளங்கும் சுகமே போற்றி - 280


    அருண கிரி எனும் அப்பனே போற்றி
    சுத்தனே போற்றி நித்தனே போற்றி
    அத்தனே போற்றி பத்தனே போற்றி
    கண்ணே போற்றி கண்மணியே போற்றி
    போற்றி போற்றி பூதலம் உய்யத்
    திருப்புகழ் தந்த தெய்வமே போற்றி. - 286


    சுபம்

    வேலுமயிலுந் துணை.


This file was last updated on 6 Nov. 2011
.